புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
01ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 02ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை கிளறேசியன் சபையை சேர்ந்த அருட்தந்தை றொனால்ட் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை சல்வற்றோறியன் சபையை சேர்ந்த அருட்தந்தை நிர்மல் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin