திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலி 25ஆம் திகதி திங்கட்கிழமை இன்று யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலியில் திருத்தைலம் மந்திரிப்பும் யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களுக்கான குருத்துவ வாக்குறுதிகளை புதுப்பிக்கும் திருச்சடங்கும் நடைபெற்றன.
இத்திருப்பலியில் குருக்கள் துறவிகள் அருட்சகோதர்கள் குருமட மாணவர்கள் இறைமக்களெனப் பலரும் கலந்து செபித்தார்கள்.
அத்துடன் மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலியும் அன்றைய தினம் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்றஇத்திருப்பலியில் குருக்கள், துறவிகள், அருட்சகோதர்கள், குருமட மாணவர்கள் இறைமக்களெனப் பலரும் கலந்து செபித்தார்கள்.

By admin