உயிர்ப்பு பெருவிழா மற்றும் சித்திரைப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வு கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலாச்சார விளையாட்டுக்களும் பரிசளிப்பும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin