இலங்கை தேசிய மாணவர் பாராளுமன்றத்திற்கு யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் மைக்கல் ஜெனுசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் பாடசாலை மாணவர் பாராளுமன்ற புத்தாக்கத்துறை அமைச்சராகவும் யாழ். கல்வி வலய மாணவர் பாராளுமன்ற பிரதமராகவும் கடமையாற்றி வந்தநிலையில் தற்போது இலங்கை தேசிய மாணவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி கடந்த மாதம் 27ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற முதல் அமர்வில் பங்குபற்றியுள்ளார்.

By admin