யாழ்ப்பாணம் செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் திரு.பகீரதகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்தந்தை டியூக்வின்சன், அருட்சகோதரி மார்க்கிறட் மோசேஸ், செம்பியன்பற்று வடக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்ததுடன் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

By admin