மன்னார் மறைமாவட்டம் சிலாவத்துறை பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கரப்பந்தாட்ட போட்டி கடந்த 27, 28 ஆம் திகதிகளில் சிலாவத்துறை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை பெய்லன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்போட்டியில் மன்னார் மறைமாவட்ட பங்குகளைச் சேர்ந்த 15 அணிகள் பங்குபற்றியிருந்தன.

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

இப்போட்டிக்கான அனுசரணையை மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin