மட்டக்களப்பு பனிச்சையடி உலக நாடுகளின் அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி கடந்த 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை வின்சன்ஸ்லோஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விளையாட்டு நிகழ்வுகளும் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கலும் இடம்பெற்றன.

மட்டக்களப்பு மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை ஜரிஸ்டன் வின்சன்ட் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

By admin