குளமங்கால் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்காலத் தியானத்துடன் இணைந்த குணமாக்கல் வழிபாடு கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித சதாசகாய அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் இந்தியாவிலிருந்து வருகைதந்த அருட்தந்தை பீற்றர் அமல்றாஜ் மற்றும் புதுவாழ்வு இயக்கத்தினர் கலந்து சிலுவைப்பாதை தியானம், திருப்பலி, குணமாக்கல் வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம் என்பவற்றினூடாக பங்குமக்களை வழிப்படுத்தினர்.

இத்தியானத்தலில் 1000ற்கும் அதிகமான மக்கள் கலந்து செபித்தனர்.

By admin