வட்டக்கச்சி பங்கின் கல்மடு நாவல்நகர் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித அந்தோனியார் ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவ் ஆலய திறப்புவிழா 15ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து அழகிய தோற்றத்துடன் அமையப்பெற்ற புதிய ஆலயத்தை திறந்து வைத்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/07/Snapshot_223.png)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/07/Snapshot_224.png)