யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வெளி விழா நிகழ்வு ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் தலைமையில் 2ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி உருத்திரபுரம் பற்றிமா அன்னை ஆலயத்தில் ஒன்றுகூடிய மரியாயின் சேனையினர் அங்கிருந்து செபமாலைப் பேரணியாக ஆரோபணம் சிறுவர் இல்லத்தை சென்றடைந்து அங்கு நடைபெற்ற திருப்பலியில் பங்குபற்றினர்.
திருப்பலியைத் தொடர்ந்து கொமிற்சியக் கூட்டமும் உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வும் அங்கு இடம்பெற்றன. இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்டத்தின் எல்லா இடங்களிலிருந்தும் வருகைதந்த 600ற்கும் அதிகமான மரியாயின் சேனையினர் கலந்துகொண்டனர்.

By admin