முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 29ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
 
திருவிழா திருப்பலியை அருட்தந்தை போல் றொகான் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 28ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
 
திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக அன்று மாலை விளையாட்டுப் போட்டியும் போட்டிகளில் வெற்றியீட்டியோருக்கான பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

By admin