மானிப்பாய் புதுமடம் கர்த்தர் ஆலய புனித கார்மேல் அன்னையின் வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
13ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 15ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. நற்கருணைவிழா திருப்பலியை புனித சவேரியார் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ஜேம்ஸ்நாதன் அவர்களும் திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
 
திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொரூப பவனியும் ஆசீர்வாதமும் நடைபெற்றன.

By admin