![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2022/02/273952151_4813509878725901_5001427277319612953_n-1200x675.jpg)
இளவாலை மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள மாதகல் புனித லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா 13ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் திருநாள் திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருப்பலி மறையுரையில் ஆயர் அவர்கள் கத்தோலிக்கர்களாகிய நாங்கள் மரியன்னையில் கொண்ட பக்தியால் வெவ்வேறு பெயர்களால் அவளை அழைக்கின்றோம் எனவும் மரியன்னைக்கு ஏன் நாம் விழா எடுக்கின்றோம் என்றால் அவள்தான் முதலாவதாகவும் சிறந்த முறையிலும் மீட்கப்பட்டவள் என்றும் தெரிவித்தார். திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடுகள் கடந்த 4ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. முதல் 8 நாட்களும் மாதகல் புனித தோமையார் ஆலய அன்பியங்கள் வழிபாடுகளை சிறப்பித்தனர். பங்குத்தந்தை அருட்திரு அன்ரனிபால அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இந்நிகழ்வுகள் சிறப்பானமுறையில் இடம்பெற்றன.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2022/02/273833850_4813509185392637_1482217326324142650_n-959x675.jpg)