மண்டைதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித ஞானப்பிரகாசியார் பீடப்பணியாளர் மன்ற விழா பங்குத்தந்தை அருட்தந்தை செல்வரட்னம் அவர்களின் வழிகாட்டலில் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தையின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து கலை நிகழ்வுகளும்பீடப்பணியாளர்களுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டியும் இடம்பெற்றதுடன் மதிய விருந்துபசாரமும் நிகழ்வின் இறுதியில் நற்கருணை வழிபாடும் நடைபெற்றது. இந்நிகழ்வில் 27பீடப்பணியாளர்கள் கலந்துபயனடைந்தனர்.

By admin