மணற்காடு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
அன்றைய தினம் புனிதரின் திருவிழாவை சிறப்பிக்குமுகமாக இளையோரால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வு நடைபெற்றதுடன் அன்று மாலை பங்குமக்களின் தயாரிப்பில் உருவான சகோதர பாசம் நாட்டுக்கூத்தும் மேடையேற்றப்பட்டது.

By admin