![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2022/02/273813676_3298005900485983_5457545200755535819_n-1200x675.jpg)
கிளிநொச்சி மறைக் கோட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம் 12ஆம் திகதி கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி மறைக் கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்திரு செபஜீவன் அவர்களின் ஓழுங்குபடுத்தலில் கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மறைக் கோட்ட முதல்வர் அருட்திரு யேசுதாஸ் அவர்கள் கலந்து சிறப்புரை வழங்கினார். பொது நிலையினரின் திருத்தூதுப் பணிகளை ஊக்குவிக்கும் முகமாக அருட்திரு செபஜீவன் அவர்களும் வளவாளர் அலெக்ஸ் அமலரட்ணம் அவர்களும் கருத்துரை வழங்கியிருந்தனர். மறைக் கோட்டப் பங்கு பிரதி நிதிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. அத்துடன் யாழ் மறைமாவட்ட பொது நிலையினர் கழகக் கூட்டம் கடந்த 13ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்டக் குரு முதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்களும் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்திரு மவுலிஸ் அவர்களும் மற்றும் கிளிநொச்சி மறைக் கோட்ட இயக்குநர் அருட்திரு செபஜீவன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கியிருந்தனர். இக்கூட்டத்தில் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தங்கள் பணிப்பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2022/02/273759785_3298005527152687_2598786157725260116_n-1200x675.jpg)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2022/02/273633191_3298012747151965_6917850743512828059_n-1200x675.jpg)