![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2022/03/WhatsApp-Image-2022-03-25-at-19.25.31-1-1200x675.jpeg)
யாழ் புனித மரியன்னை பேராலய பங்கிலுள்ள பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற உறுதிப்பூசுதல் அருட்சாதனத் திருப்பலியில் 62 பிள்ளைகள் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள். இந்நிகழ்வு பேராலயப் பங்குதந்தை அருட்திரு மவுலிஸ் அவர்களின் வழிநடத்தலில் உதவிப் பங்குதந்தையர்கள் மற்றும் மறையாசிரியர்களின் உதவியுடன் சிறப்பாக இடம்பெற்றது.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2022/03/WhatsApp-Image-2022-03-25-at-19.25.31-1200x675.jpeg)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2022/03/WhatsApp-Image-2022-03-25-at-19.25.32-1200x675.jpeg)