பாசையூர் புனித அந்தோனியார் ஆலய மாணவர்களுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜொறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 87 மாணவர்கள் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
மேலும் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 5ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
யாழ். மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 39 மாணவர்கள் முதல்நன்மை அருட்சாதனத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/08/Snapshot_585.png)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/08/Snapshot_584.png)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/08/Snapshot_582.png)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/08/Snapshot_581.png)