பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் இளவாலை திருமறைக் கலாமன்றத்துடன் இணைந்து முன்னெடுத்த மூன்று நாட்களைக் கொண்ட நாடாக பயிற்சி பட்டறை நிகழ்வு 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
 
யாழ்ப்பாணம் வலம்புரி விருந்தினர் விடுதியில் நடைபெற்றுவரும் இப்பயிற்சி பட்டறையில் இளவாலை திருமறைக் கலாமன்றத்திலிருந்து 24 வரையானவர்கள் கலந்து பயிற்சி பெற்றுவருகின்றனர்.
 
இங்கு பயிற்சி பெறுபவர்களால் உருவாக்கப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான விழிப்புணர்வு ஆற்றுகை நிகழ்வு பல இடங்களிலும் முன்னெடுக்கவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin