நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எயின்சிலி றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 11ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில் 10ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது. நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
 
அத்துடன் சிறார்களுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 9ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு இடம்பெற்றது. பங்குத்தந்தை அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 11 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.
 

By admin