தவக்காலத்தை முன்னிட்டு இவ்வருடமும் தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால தியானங்களை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரிபாலகர் அருட்தந்தை ஜெகன் கூஞ்ஞே அவர்கள் தெரிவித்துள்ளார்.
மறைக்கோட்டங்கள் ரீதியாக நடைபெறவுள்ள இத்தியானங்களில், பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி தீவக மறைக்கோட்டத்திற்கும், மார்ச் மாதம் 04ஆம் திகதி யாழ் மறைக்கோட்டத்திற்கும், 11ஆம் திகதி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மறைக்கோட்டங்களிற்கும் 18ஆம் திகதி இளவாலை மறைக்கோட்டத்திற்கும் 25ஆம் திகதி பருத்தித்துறை மறைக்கோட்டத்திற்கும் பிரத்தியேகமான நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி பொது வழிபாடுகளும் இடம்பெறவுள்ளதாகவும் இத்தியானங்களில் பங்குபற்றுபவர்களுக்கான உணவும், தங்குமிடவசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதெனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

By admin