நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் முன்னெடுக்கும் சிறிய லூர்து அன்னை திருத்தலம் நோக்கிய 18ஆவது தமிழர் திருயாத்திரை வருகின்ற மாதம் 03ஆம் திகதி நடைபெற உள்ளதென நெதர்லாந்து ஆன்மிக பணியகத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
அன்றைய நாளில் காலை சிறப்பு நற்கருணை வழிபாடும் மதியம் தூய கன்னிமரியாவின் பிறப்புவிழா திருப்பலியும் நடைபெறவுள்ளதுடன் தொடர்ந்து அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெறவுள்ளன.
 
இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு நெதர்லாந்து ஆன்மீக பணியகத்தினர் புலம்பெயர் தேசத்திலுள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

By admin