சக்கோட்டை பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜோதிநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 26ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சக்கோட்டை புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 196 பிள்ளைகள் உறுதிபூசுதல் அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

By admin