கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தில் கடந்த காலங்களில் பணியாற்றி இறந்துபோனவர்களை நினைவு கூர்ந்து முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வு 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி கரித்தாஸ் நிறுவனத்தில் நடைபெற்றது.
நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட முந்நாள் ஆயர் பேரருட்தந்தை தியோகுப்பிள்ளை மற்றும் நிறுவன முந்நாள் இயக்குனர்கள் அருட்தந்தை தேவராஜா, அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன், அருட்தந்தை பயஸ், அருட்தந்தை ஜெபநேசன், அருட்தந்தை பீற்றர் மற்றும் நிறுவன பணியாளர்கள் ஆகியோரின் உருவப்படங்கள் ஸ்தாபிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குனர் அருட்தந்தை யூயின் பிரான்சிஸ், முல்லைத்தீவு மறைகோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை, கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை சகாயநாயகம் மற்றும் கரித்தாஸ் வன்னி கியூடெக் முந்நாள் இயக்குனர் அருட்தந்தை யாவிஸ் மற்றும் பணியாளர்கள் கலந்து செபித்ததோடு திருவுருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

By admin