![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2022/01/271192429_4854103594697842_7436494677742809863_n-1200x675.jpg)
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களினால் கண்டி மறைமாவட்டத்தின் புதிய ஆயாரக நியமனம் பெற்ற பேரருட்திரு வலன்ஸ் மென்டிஸ் அவர்கள் 17ம் திகதி கடந்த திங்கட்கிழமை கண்டி மறைமாவட்ட ஆயராக தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
கண்டி புனித அந்தோனியார் பேராலயத்தில் நடைபெற்ற ஆயர் பொறுப்பேற்கும் நிகழ்வில் கண்டி மறைமாவட்டத்தின் 7வது புதிய ஆயராக பெறுப்போற்றுக்கொண்ட பேரருட்திரு வலன்ஸ் மென்டிஸ் அவர்கள் 2006ஆம் ஆண்டிலிருந்து சிலாபம் மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றி வந்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2022/01/271999198_4854093671365501_6126501829893001488_n-1200x675.jpg)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2022/01/271227277_4854099741364894_2320611395676800733_n-1200x675.jpg)