இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக மாதாந்தக் கூட்டம் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
 
கழகத் தலைவர் கீதபொன்கலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக செயலாளர் அலெக்ஸ் அமலரட்ணம் அவர்கள் கலந்து திருச்சபையில் பொதுநிலையினரின் பங்கு தொடர்பிலும் பொதுநிலையினர் கழகத்தின் செயற்பாடுகள் எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றியும் கருத்துரை வழங்கினார்.
 
இக்கூட்டத்தில் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்தந்தை மவுலீஸ் அவர்களும், சுன்னாகம் பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களும், கலந்து கொண்டார்கள்.

By admin