நாட்டில் ஏற்பட்டு வரும் அசாதாரண சூழலால் மக்கள் பெரிதும் நெருக்கீடுகளை எதிர் கொண்டு வருவதை கருத்திற் கொண்டு கரித்தாஸ் தேசிய நிலையத்தின் ஏற்பாட்டில் பிராந்திய ரீதியாக மக்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்ட அமைதிப் பிரார்த்தனை யாழ். மறைமாவட்டத்தில் இம்மாதம் 9 ஆம் திகதி நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சர்வமத தலைவர்களுடன் அப்பிரதேச மக்களும் கலந்துகெண்டனர். யாழ். கியுடெக் கரித்தாஸ் இயக்குனர் அருட்திரு இயுயின் அவர்கள் நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.

By admin