Month: June 2023

அளம்பில் பங்கில் முதல்நன்மை அருட்சாதனம் பெறும் பிள்ளைகளுக்கான பாசறை நிகழ்வு

அளம்பில் பங்கில் முன்னெடுக்கப்பட்ட முதல்நன்மை அருட்சாதனம் பெறும் பிள்ளைகளுக்கான பாசறை நிகழ்வு 29ஆம் திகதி திங்கட்கிழமை கொக்கிளாய் மடுமாதா தீவில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஏற்பாட்டில் உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ தொழிற்பயிற்சி நிறுவனத்தில் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ தொழிற்பயிற்சி நிறுவனத்தில் கணினி, தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல், தையல், மின்னியல், ஆங்கிலம், ஆரி வேர்க் போன்ற கற்கை நெறிகளில் பயில இருக்கும் மானவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சாதாரண தர, உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான இக்கற்கைநெறி வருகின்ற…

சுன்னாகம் பங்கில் திருவிழிப்பு ஆராதனை

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் தூய ஆவி பெருவிழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட திருவிழிப்பு ஆராதனை 27ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. மாலை செபமாலையுடன் ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடைபெற்ற இத்திருவிழிப்பு ஆராதனையில் பங்கு மக்கள் பக்தியோடு கலந்து தூய ஆவியானவரின்…

நாரந்தனை பங்கில் திருவிழிப்பு ஆராதனை

தூய ஆவியார் பெருவிழாவை முன்னிட்டு நாரந்தனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருவிழிப்பு ஆராதனை புனித பேதுரு பவுல் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 27ஆம் திகதி சனிக்கிழமை மாலை ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடைபெற்ற இத்திருவிழிப்பு ஆராதனையில்…

யாழ். கோப்பாய் புனித மரியன்னை ஆலய வருடாந்த திருவிழா

யாழ். கோப்பாய் புனித மரியன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை மொன்பேர்ட் அவர்களின் தலைமையில் 31ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். ஆயத்தநாள் வழிபாடுகள் 22ஆம் திகதி…