வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் போர் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்திட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்றுவரும் இச்செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவர்களுக்கான கருத்தமர்வு செப்ரெம்பர் மாதம் 29ஆம் 30ஆம் திகதிகளில் நிறுவன பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாகாவித்தியாலய ஆசிரியை ஜெயபாரதி அவர்கள் வளவாளராக கலந்து நெறிப்படுத்திய இக்கருத்தமர்வில் 90 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin