யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம் இரண்டு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் முதல் குழுவினருக்கான தியானம் கடந்த 06ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை யாழ். பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது.
நற்கருணை நாதர் சபையைச் சேர்ந்த அருட்தந்தை நிலேந்திரா குணசேகர அவர்கள் நெறிப்படுத்திய இத்தியானத்தில் தியான உரைகள், சிறப்பு நற்கருணை ஆராதனைகள், திருப்பலிகள் என்பன இடம்பெற்றதுடன் 58 வரையான குருக்கள் இத்தியானத்தில் பங்குபற்றினார்கள்.

By admin