இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான அரசநாடக விழாவில்

யாழ். திருமறைக் கலாமன்ற கலைஞர்களில் முக்கியமானவரும் மன்ற நாட்டுக்கூத்து துறையின் பொறுப்பாளராகவும் பணியாற்றும் கூத்துக் கலைஞர் கலாபூசணம் யூல்ஸ்கொலின் அவர்கள் நாடக கீர்த்தி விருதினை பெற்றுக் கொண்டார். யாழ்ப்பாணம் பாசையூர் பிரதேசத்தை சேர்ந்த கூத்துக் கலைஞரான இவர் இலங்கை நாடகத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை மேன்மைப்படுத்தி நாடகத்துறையின் அதி உச்ச விருதாகிய நாடக கீர்த்தி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

By admin