யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நவாலி புனித பேதுரு பவுல் ஆலய இளையோருக்காக முன்னெடுக்கப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நவாலி சனசமூகநிலைய வளாகத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைமைத்துவ பயிற்சிகள், குழு செயற்பாடுகள், குழுவிளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் 55 வரையான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin