உணவுப் பாதுகாப்பு செயற்திட்டத்தின்கீழ், உலக உணவு தினத்தினை முன்னிட்டு ‘நஞ்சற்ற உணவை உண்போம், நோயற்ற வாழ்வை வாழ்வோம்’ எனும் தொனிப்பொருளில், யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால், இரசாயனப் பாவனையற்ற வீட்டுத்தோட்ட உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும், 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் கியூடெக் கரித்தாஸ் நிறுவனத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக புனித யாகப்பர் ஆலய பங்குத்தந்தை அருட்திரு யாவிஸ் அவர்களும், கியூடெக் கரித்தாஸ் நிர்வாக உத்தியோகத்தர் செல்வி மரியாம்பிள்ளை நித்திலா அவர்களும் கௌரவ விருந்தினர்களாக மதிப்பிற்குரிய சதானந்த குருக்கள்இ ரலீம் மௌலவி அவர்களும் மற்றும் டயானா பிளாஸ்ரிக் நிறுவன இயக்குனர் தவராசா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

By admin