செபமாலை மாதத்தை முன்னிட்டு செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இப்பேரணி செம்பியன்பற்று கடற்கரை வீதியிலுள்ள மடு அன்னை திருச்சொருபத்தின் முன்பாக ஆரம்பமாகி புனித பிலிப்புநேரியார் ஆலயத்தை வந்தடைந்து அங்கு இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.
திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொரூப ஆசீர்வாதம் இடம்பெற்றதுடன் இப்பவனியில் 300 வரையான இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin