IMG_8384சன31. கடந்த பத்து வருடங்களாக புனித பத்திரிசியார் கல்லூரியின் 23 ஆவது அதிபராக அரும்பணியாற்றிய அருட்திரு.ஜெறோ செல்வநாயகம் அடிகளாரின் அறுபது அகவை மணிவிழா நிகழ்வும்   அவரின் பிரயாவிடை நிகழ்வும்  30.01.2018 அன்று  புனித பத்திரிசியார் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் யாழ்.மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு, அங்கிருந்து  அருட்திரு.ஜெறோ செல்வநாயகம் அடிகளார்   பாடசாலை பான்ட் வாத்திய அணிவகுப்போடு பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் அங்கு நடைபெற்றது. அங்கு உரையாற்றியபோது ஆயர் அருட்கலாநிதி    மேதகு  ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம்    அவர்கள்,  10 வருடங்களாக அதிபர்ப்  பணியாற்றிய அருட்திரு.ஜெறோ செல்வநாயகம் அடிகளாரின்   பணியின் பல தன்மைகளை சிறப்பாக சுட்டிகாட்டி   பாராட்டினார்.   மேலும் அவர் தனது உரையில் கல்வி – எம் சமூகத்தில் வல்லவர்களை விட நல்லவர்களை உருவாக்க வேண்டும்,  இப்பணியில் ஈடுபடும் அனைவரும்  இதனை நோக்காக் கொண்டு அர்ப்பணிப்போடு சேவை ஆற்றவேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக யாழ்மாவட்ட அரச அதிபர் திரு.  வேதநாயகம், வடமாகாண கல்வி அமைச்சர் திரு. சர்வேஸ்வரன்  கலந்து சிறப்பித்தார்கள்.

IMG_8476 IMG_8467 (1) IMG_8582 IMG_8558

By admin