கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் இயற்கை சூழலைப் பாதுகாப்போம் செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி முல்லைத்தீவு மறைக்கோட்டங்களிலுள்ள தரம் மூன்று தொடக்கம் உயர்தரம் வரை கல்விகற்கும் மாணவர்களுக்கிடையே ஓவியம் மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்ட்டடுள்ளன.
எதிர்வரும் யூலை மாதம் 02ஆம் திகதி பங்குரீதியாக நான்கு பிரிவுகளாக இப்போட்டிகள் நடைபெறவுள்ளதெனவும் பங்கு ரீதியாகவும், மறைக்கோட்ட ரீதியாகவும் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்படுமெனவும் இப்போட்டிகளின் விபரம் அடங்கிய தகவல்கள் பங்குத்தந்தையர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

By admin