மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 20ஆம், 21ஆம் திகதிகளில் தாழ்வுபாடு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கருத்துரை, நற்கருணை ஆராதனை, திருப்பலி, கலைநிகழ்வுகள், விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றன.
கருத்துரையை மன்னார் மறைமாவட்ட கலையருவி இயக்குநர் அருட்தந்தை டக்ளஸ் அவர்கள் ‘இளையோர் விழுமியங்கள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த 100 வரையான இளையோர் கலந்து பயனடைந்தனர்.

By admin