அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை பொன்சியன் அவர்களின் குருத்துவ வாழ்வின் 25ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு 21ஆம் திகதி சனிக்கிழமை முல்லைத்தீவு – உண்ணாப்புலவு அமைதித் தென்றல் நிறுவனத்தில் நடைபெற்றது.
அருட்தந்தை அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து யூபிலி நிகழ்வுகள் அங்கு இடம்பெற்றன. இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள், அருட்தந்தையின் குடும்ப உறவினர்கள், இறைமக்களெனப் பலரும் கலந்து கொண்டனர்.

By admin