மாங்குளம் புனித அக்னேசம்மாள் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் புதிய ஆலய திறப்பு விழா கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் மருதமடு அன்னையின் திருச்சொருபமம் புனித அக்னேசம்மாள் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டதன் நினைவாக 29ஆம் திகதி திங்கட்கிழமை இவ்வாலயம் யாத்திரைத்தலமாக பிரகடணம் செய்துவைக்கப்பட்ட கல்வெட்டை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் திரைநீக்கம் செய்துவைத்தார்.

By admin