இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்
இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 25ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டெனிசியஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 13 பிள்ளைகள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.