முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கிறிஸ்து அரசர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை கான்ஸ்போவர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
24ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க பாடசாலை அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin