மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு கடந்த 23, 24, 25ஆம் திகதிகளில் மன்னார் மறைமாவட்ட குடும்ப பணிகள் மற்றும் பொதுநிலையினர் நடுநிலையத்தில் நடைபெற்றது.
மேய்ப்புப்பணி திட்டமிடல் குழு செயலாளர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னான்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் ‘செபம்’ என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் இறைவேண்டல் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அத்துடன் அருட்தந்தை ஜெராட் றொசாய்றோ, அருட்தந்தை விக்டர் சோசை, அருட்தந்;தை யூட் குருஸ் மற்றும் அருட்தந்தை அந்தோனிதாஸ் டலீமா ஆகியோர் வளவாளர்களாக கலந்து செபவாழ்வை ஆழப்படுத்தல் தொடர்பான கருத்துரைகள் வழங்கியதுடன் குழு ஆய்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுநிலையினர் என பலரும் கலந்து கொண்டனர்.

By admin