தவக்கால சிறப்பு நிகழ்வாக மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஹிங்குரான கல்வாரி திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட சிலுவைப் பாதை தியானம் கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
 
திருத்தல பரிபாலகர் அருட்தந்தை சம்பத் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யோசப் பொன்னையா அவர்கள் கலந்து திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.
 
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin