மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவைப் பங்கின் துணை ஆலயமான புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை கல்முனை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை தேவதாசன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

18 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 24ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

By admin