பொதுநிலைப் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையினரால் முன்னெடுக்கப்பட்ட புனித பிரான்சிஸ் அசீசியார் வருடாந்த திருவிழா 04ஆம் திகதி புதன்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அருள்தாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார். அத்துடன் புனித பிரான்சிஸ்கன் 3ஆம் சபை பொதுநிலையினர் குழுமத்திற்கான புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் திருச்சடங்கு கடந்த மாதம் 28ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றதுடன் அங்கத்தவர்களுக்கான தவ உடையும் வழங்கி வைக்கப்பட்டது.

By admin