முல்லைத்தீவு செல்வபுரம் புனித யூதாததேயு முன்பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்று கல்வி செயற்பாட்டை முடித்துக்கொண்டு தரம் 1க்கு செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு பங்குத்தந்தை அருட்திரு அகஸ்ரின் அவர்கள் கலந்து நிகழ்வை சிறப்பித்தார். மேலும் மாதகல் புனித தோமையார் முன்பள்ளியில் தரம் 1 க்கு செல்லும் 15 மாணவர்களுக்கான பிரிவுபசார நிகழ்வு 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்திராக மாதகல் பங்குதந்தை அருட்திரு அன்ரனிபாலா அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வு அன்புக்கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி மேரி றோஸ் அவர்களின் ஓழுங்குபடுத்தலில் நடைபெற்றது.

By admin