தீவக மறைக்கோட்ட மறையாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவ சுற்றுலா 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
மறையாசிரிய இணைப்பாளர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள் செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தை தரிசித்து அங்கு நடைபெற்ற மகிழ்வூட்டல் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மண்டைதீவு, அல்லைப்பிட்டி, சாட்டி, நாரந்தனை, ஊர்காவற்துறை, எழுவைதீவு, புங்குடுதீவு, நெடுந்தீவு ஆகிய பங்குகளை சேர்ந்த 40 வரையான மறையாசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin