‘கூட்டொருங்கியக்கம் – விவிலியப்பார்வையில்’ என்னும் தலைப்பில் பொதுநிலையினர் வலுவூட்டலை நோக்காகக்கொண்டு கிளறேசியன் சபை விவிலிய பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட விவிலிய மாநாடு 21ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மறைக்கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பணியக இயக்குநர் அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவிலியபார்வையில் பங்கேற்புஇ ஒன்றிப்புஇ பணி என்னும் தலைப்புக்களில் கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன் அஞ்சல் வழி விவிலிய கல்வியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் கிளறேசியன் வெளியீட்டகத்தினால் முன்னெடுக்கப்படும் புத்தக கண்காட்சி 21ஆம் திகதி கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகி 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை மறைக்கல்வி நடுநிலையத்தில் நடைபெறவுள்ளமையும் இங்கு குறிப்படத்தக்கது.

By admin