ஊர்காவற்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் கடந்த 24, 25, 26ஆம் திகதிகளில் ஊர்காவற்துறை புனித பரலோக அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குதந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபையின் மறையுரைஞர் குழும அருட்தந்தையர்கள் ஜெயபாலன், யூட்அவலின், யூட் கறோவ், அமிர்தராஜ், றொயிஸ்ரன் அருட்சகோதரர்கள் மரினோ கிலோத், மற்றும் டிலுசன் ஆகியோர் கலந்து சிலுவைப்பாதை தியானம், திருப்பலி, நற்கருணை வழிபாடு மற்றும், குணமாக்கல் வழிபாடு என்பற்றினூடாக பங்குமக்களை வழிப்படுத்தினார்கள்.

By admin