திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே அவர்கள் மட்டக்களப்பு மறைமாவட்டத்திற்கு மேய்ப்புப்பணி விஜயம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
கடந்த 2ஆம் 3ஆம் திகதிகளில் அங்கு தங்கியிருந்த திருத்தூது பிரதிநிதி அவர்கள் 3ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பில் வரலாற்று சிறப்புமிக்க ஆதித்திய மலை புனித சதாசகாய மாதா ஆலய வருடாந்த திருப்பலியை தலமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யோசப் பொன்னையா அவர்களும் மறைமாவட்ட குருக்கள், துறவிகள் பலரும் கலந்துகொண்டனர்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/09/Snapshot_675-850x478.png)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/09/Snapshot_676-850x478.png)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/09/Snapshot_673-850x478.png)